அவர்
Monday 29 April 2019
பாரதிதாசன் பிறந்தநாள் 2019
அவர்
Sunday 28 April 2019
Saturday 27 April 2019
Wednesday 24 April 2019
இருவர்
Tuesday 23 April 2019
Sunday 21 April 2019
Friday 19 April 2019
டூலெட் - TOLET
Thursday 18 April 2019
ஒருநாள் கூத்து - கற்பனைக்கும் இயல்புக்கும் நடுவே.
பொதுப்புத்தியில் ஊறிப்போன சில செய்திகள், நாமாகவே கற்பித்துக் கொண்ட சில புலனங்கள், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது நம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி, பொதுப்புத்தியால் அதிகமாகப் பார்க்கப் படாமல் போன ஒரு திரைப்படத்தை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தேன். "ஒரு நாள் கூத்து". (2016)
Saturday 6 April 2019
காதல் கண்ணி - 1
............................. வாழ்த்து.....................
======================================
உண்டென உரைத்தவர் கண்டது மொழிந்திலர்
இல்லென உரைத்தவர் சொன்னது நிறுவிலர்
பண்டு பல்கிய அண்டமென் றொருபொருள்
பிண்டங் களாக்கிப் பின்னிப் பகுத்து
மலையும் மண்ணும் மழையும் வெயிலும்
காற்றும் புயலும் சூறா வளியும்
தூசு நிறைந்த துடிப் பாலைகளும்
ஆறும் கடலும் வானும் நிலவும்
ஊனும் உயிரும் ஒருங்கிக் கலந்து,
காணும் பல்லுயிர் நாளும் பெருக்கிய
மாசறு இயற்கை மாவடி தொழுவோமே
......................நாஞ்சிநாட்டெல்லை........................
வண்டமிழ் நாட்டின் தென்கரை தழுவும்
கொற்றவை பொன்னடிக் குமரிக் கடல்முதல்;
வடக்கி லோங்கிய வளமிகு தாடகை
மலையிடை விரியும் மயங்கா மருதமும்,
குணகடல் தழுவும் கோட்டையின் மதிலொடு
குடகடல் கரையிருங் கொல்லங் கோட்டின்
நீரோடிக் கரைவரை வேரோடும் நெய்தலும்,
அதங்கோடு அடியிறங்கும்
பெருங்கோடு வானமலை
அருள்செயக் கிடைத்த
பன்றிக்கோடும் பழையாறும்,
பேச்சிப்பாறைப் பெருநீரும்,
வட்டப்பாறை கீரிப்பாறை
வழிநடந்து கீழிறங்கி
நெட்டெனப் பாயும்
உலக்கை அருவியென
பெருவழி முழுவதும்
பரவிய குறிஞ்சியும்,
கடுக்கரை மலைதொட்டு
பூதையின் வடக்குயர்ந்து
பணகுடிப் பாதைவரை
படர்ந்திட்ட முல்லையும்,
ஔவையின் அடிதொட்டு
மூப்பன்தரம் முன்நிற்க
கைக்கெட்டும் தூரத்தில்
கரந்துறையும் பாலையும்,
நிலம்தின்றக் கடலுக்குள்
நின்றிருக்கும் வள்ளுவர்தன்
உயர்பார்வை கொண்டு
ஊர்ந்து பார்த்திட்டால்;
மலைக்குச் சூடிய மாலையென நெய்தலும்;
மலைநின்று இறங்கிய மருதப் பரவலும்;
வானமலை தலையில் வளங்கெழு குறிஞ்சியும்;
இடையில் ஆரமென இழையும் முல்லையும்;
ஆரைவாய் அடுத்தப் பாலையின் தொடக்கமும்;
பாட்டன் தொல்காப்பியன் பகர்ந்தத் திணையனைத்தும்
ஏட்டில் இருப்பதுபோல் கூட்டாய் இருக்குமொரு
நாட்டில் நன்னாடாம் நாஞ்சில் நாடதுவே.
=================================
இணைக்குறள் ஆசிரியப்பா