Thursday 13 June 2024

மரத்துப்போன மரம்

 

விரிந்துகிடக்கும்
நெடுந்திடல்களில்
விளையாட்டுச் சிறுவர்களின்
ஆராவாரம் கேளாமல்
பகலுறங்குகின்றன பறவைகள்.
 
பிஞ்சுக்கைகள் தீண்டாததால்
நெடுமூச்செறிகின்றன
பெருமரங்கள்.

பள்ளிப்பாடமும்
வீட்டுப்பாடமும்
பகுத்தறிய நேரமின்றி
மனனம் செய்தே
மரத்துப்போன மனமொன்று
தாளட்டைகளில் செய்துவைத்த
மரங்களின் கீழே
மஞ்சள் வண்ணத்தில் மின்னுகின்றது;

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்"

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்