Monday 17 June 2024

வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாள்

 

வாஞ்சிநாதன் மனைவி பாத்திரம்கழுவி வயிறு வளர்த்தத் தெரு


கொடியவனைச் சுட்டுவிட்டுத்

தன்னுயிர் மாய்த்த

கட்டியவன் வீரவாஞ்சியானான்.

 

நம்பி வந்த பொன்னம்மாள்

நலங்கெடப் புழுதி வீழ்ந்து

நாற்றிசையும் அலைந்தலைந்து,

எச்சில் பாத்திரம் விளக்கியே

எலும்பிடைச் சிறுத்திருந்த

இடும்பைகூர் வயிற்றின்

பசியடைத்தாள்.

 

ஒட்டியிருந்தப் பருக்கைகளைக்

கழுவிக் களைந்தாரோ?

அன்றி,

ஒருவேளை உணவாகுமென

பழையதில் சேர்த்தாரோ?

 

ஒழியா வயிற்றுக்காய்

அவர் பட்ட பாடெல்லாம்

அழியாதிருக்குதையா,

 

அத்தனையும்

மெய்யாய் இருந்ததனால்!

 

வாஞ்சியின் சிலை அருகே ரெங்கையா முருகன்

================

படம் திரு ரெங்கையா முருகன்

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்