Thursday 1 August 2024

அறிவு

 


பூக்களின் முகவரி,

மணம் என்றது மூக்கு

நிறம் என்றன கண்கள்.


இருளில் என்ன செய்வாய்?

என்றது மூக்கு.

தொலைவை எப்படிக் கடப்பாய்?

என்றன கண்கள்.


சாறெடுத்துக்

குப்பியில் அடைத்துப்

பத்திரப்படுத்து

என்றது மனம்.


வெற்றுக் குடுவையில்

வேதிப்பொருட்கள் சேர்த்து

மல்லிகையைப்

பெற்றுச் சிரித்தது அறிவு.


No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்