Tuesday 20 August 2024

பூட்டவிழ்கும் மனப்பெட்டகம்


 

பரண் மேல்

பூட்டவிழ்த்துத்

தானே திறக்கின்றது

ஊர் மறந்த மனிதனின்

மனப்பெட்டகம்.


அதிலிருந்து

விழுந்து நொறுங்கி

காகிதத்தில் வழிந்தோடும்

நினைவுகளின் மொழியாற்றில்,

நம்மை உள்ளிழுக்கும்

காலச்சுழிகள்.


20-08-2024

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்