Tuesday 6 August 2024

மரங்கள்


மனிதர்கள் நிறைந்தப்
பெருநகரங்களின்
கட்டிடக் காடுகளில்,

வண்டிகள் நிறைந்தொழுகும்
ஆறுவழிச் சாலைகளில்,

இளைப்பாறுவதற்கு;

நினைவுகளில் முளைக்கும்
மரங்கள் மட்டுமே
மிச்சமிருக்கின்றன.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்