அவன் நடக்கிறான்,
வேகமாக நடக்கிறான்
இன்னும்
செப்பனிடப்படாத பாதையில்.
காலரவம் கேட்டு
குற்றுச் செடிகளின் உள்ளேயிருந்து
பதறி ஓடுகின்றன
பச்சோந்திகள்.
கைவீச்சின் அதிர்வில்
கழன்று விழுகின்றன
சில
தோல் பாவைகளின் முகமூடிகள்.
அடிக்கும் காற்றில்
அவன் முகமூடியும் கழன்றுவிழும்
என்று அச்சுறுத்துகிறது ஒரு குரல்.
போகட்டும்...
நடப்பதற்குச் சொந்தமாகப்
பாதையேனும் எங்களுக்கு மிச்சமிருக்கும்.
உங்களுக்கு?
பதிலுரைக்கின்றன பல குரல்கள்.
அவன் நடந்துகொண்டேயிருக்கிறான்.
காலம் காத்து நிற்கிறது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்